நேற்று சிகிச்சைக்கு பிறகு வனத்திற்கு சென்ற யானை இன்று உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சுமார் 55 வயதுடைய காட்டு யானை, நாட்டு வெடிகுண்டை கடித்ததில், அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நாட்களாக காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தது.

இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. 

இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. மேலும், நோய்வாய்பட்ட யானையை தொடர்ந்து, வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நரசிபுரம் அருகே வனப்பகுதியில் இந்த யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...