வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் விவரங்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது,


கோவை:

நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வடகோவை ரயில் நிலையம் அருகே அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தண்டவாளத்தில் கடுமையாக காயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர், முழு முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை இதுவரை தெரியவில்லை. அவர் கையில் பச்சைக் குத்து இருந்ததுடன், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்தார், தற்செயல் விபத்தா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...