திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம்.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது.
அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.
இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம்.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது.
அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.