திருப்பூரில் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி 16-ம் தேதி தொடக்கம்

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம். 

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. 

அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...