மூளைச் சாவு அடைந்த திருப்பூர் பெண் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.

தானம்

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...