கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.
தானம்
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.
தானம்
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.