திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.
திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.
ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர்.

அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர்.

அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.