சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்து நாசம் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார்.  அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர். 



அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

தீ விபத்தில்  கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...