நீட் தேர்வு : கோவையில் மாணவரின் உதவிக்கு சென்ற தாய் மயக்கம் - அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தாய் ரோகிணி (39) பள்ளி வளாகத்தின் வெளியே இருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்வுக்காக மகனை அதிகாலையிலேயே சாப்பிடாமல் அழைத்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 



இந்த நிலையில், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தேர்வர்களுடன் வந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...