கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தாய் ரோகிணி (39) பள்ளி வளாகத்தின் வெளியே இருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்வுக்காக மகனை அதிகாலையிலேயே சாப்பிடாமல் அழைத்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தேர்வர்களுடன் வந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.