காங்கயம் : கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காங்கயம் : கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காங்கயம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (29) கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற அவர், பால்கனி அருகே நின்று கொண்டு இருந்தபோது, போதை தலைக்கேறியதால் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (29) கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற அவர், பால்கனி அருகே நின்று கொண்டு இருந்தபோது, போதை தலைக்கேறியதால் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.