குடிபோதையில் மாடியில் இருந்து விழுந்த இளம் பைனான்ஸியர் உயிரிழப்பு

காங்கயம் : கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கயம் :  கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

காங்கயம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (29) கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வீட்டிற்கு சென்ற அவர், பால்கனி அருகே நின்று கொண்டு இருந்தபோது, போதை தலைக்கேறியதால் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...