தொடங்கியது அக்னி நட்சத்திரம் , கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும். 

அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...