கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும்.
அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.
கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும்.
அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.