நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.
நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன.

தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன.
ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன.

தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன.
ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.