உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது. 



தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. 



தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன. 

ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...