உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது. 



தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. 



தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன. 

ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...