திருப்பூரில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் பறந்த அ.ம.மு.க., கொடியினால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...