திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.