திருப்பூரில் பெய்த கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து விபத்து: பெண் பலி, இருவர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெப்பசலனம் காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பல பகுதிகளில் மரம் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் துரைசாமி என்பவர் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். அந்தப் புதிய கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர், மழையின் காரணமாக இடிந்து அருகிலிருந்த ஒட்டு வீட்டின் மீது விழுந்தது. அதில், வசித்து வந்த மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி திருப்பதியின் மனைவி ஐஸ்வர்யாவின் மீது இடிபாடுகள் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வீட்டிலிருந்த அவரது உறவினர்கள் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.



விதிகளை மீறி கட்டிடம் கட்டியிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று அருகிலிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இறந்துபோன ஐஸ்வர்யாவிற்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...