கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
அரசு மருத்துவமனை அருகே சுமார் 30 வருடங்களாக இயங்கி வந்த இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், டீ கடைகள், மின் சாதனக் கடைகள், கண் கண்ணாடி கடைகள் என மொத்தம் 14 கடைகள் இயங்கி வந்தன.
இந்நிலையில், கட்டிட வளாகத்தின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்தை இடிக்க முடிவு செய்த மாநகராட்சி ஒரு வருடத்திற்கு முன்பே வளாகத்தில் உள்ள 14 கடைகளையும் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை மேற்கோள்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கடந்த மாதம் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனையடுத்து, இன்று காலை கடையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டிட வளாகம் இடித்து அகற்றப்பட்டது.
கட்டிடம் அமைக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.