நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
மாவட்டத்தில் கோடை விழா சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அரங்குகள் அமைத்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களிலும் மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரங்களில் உள்ள உழவர் சந்தைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தினசரி காய்கறி அங்காடிகளை சுற்றியுள்ள இடங்கள் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும், விற்பனைக்கு தயாராக உள்ள காய்கறிகளை நல்ல முறையில் காட்சிப்படுத்துவோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும் அனைத்து உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி அங்காடிகளை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விற்பனையாளர்கள் தங்கள் அங்காடிகளை தூய்மையாக பராமரித்து பரிசுகளை வென்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
மாவட்டத்தில் கோடை விழா சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அரங்குகள் அமைத்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களிலும் மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரங்களில் உள்ள உழவர் சந்தைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தினசரி காய்கறி அங்காடிகளை சுற்றியுள்ள இடங்கள் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும், விற்பனைக்கு தயாராக உள்ள காய்கறிகளை நல்ல முறையில் காட்சிப்படுத்துவோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும் அனைத்து உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி அங்காடிகளை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விற்பனையாளர்கள் தங்கள் அங்காடிகளை தூய்மையாக பராமரித்து பரிசுகளை வென்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.