நீலகிரி காய்கறி கண்காட்சி: தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள்

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

மாவட்டத்தில் கோடை விழா சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அரங்குகள் அமைத்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களிலும் மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரங்களில் உள்ள உழவர் சந்தைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தினசரி காய்கறி அங்காடிகளை சுற்றியுள்ள இடங்கள் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும், விற்பனைக்கு தயாராக உள்ள காய்கறிகளை நல்ல முறையில் காட்சிப்படுத்துவோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும் அனைத்து உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி அங்காடிகளை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விற்பனையாளர்கள் தங்கள் அங்காடிகளை தூய்மையாக பராமரித்து பரிசுகளை வென்றிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...