அரசு வேலை எதற்கு? பீடா கடை வையுங்கள்: பா.ஜ.க. முதலமைச்சர் அட்வைஸ்

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.

இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.

திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...