திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.
இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.
திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.
திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.
இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.
திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.