வால்பாறையில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது. 



தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி வால்பாறை நடைபெற்றது. வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், காந்திசிலை போன்ற முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. ஏராளமானோர் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர் போன்ற 34 வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். 



மேலும், பேருந்து, கார், ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களுக்கு விதிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி, அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்வது மிக முக்கியம் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். தமிழகம் வாகன விபத்தால் உயிர்ச்சேதமில்லாத மாநிலமாக விளங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 



இதில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...