கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் பேருந்து ஒன்று புரூக் பாண்ட் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லும் வீடியோ காட்சி வெளியானது. சம்மந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவலர்கள் அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1 A (TN 42 M 5112) என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநர் இருக்கையின் அருகில் உள்ள ஜன்னலில் அமர்ந்து அந்த பேருந்தின் ஊழியர் ஒருவர் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில், பயணம் செய்யும் அந்த ஊழியரால், இருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டது.

இது போன்ற மீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.