பயணிகளின் உயிருடன் விளையாடும் தனியார் பேருந்து ஊழியர்கள்: அதிர்ச்சிகர வீடியோ

கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.


கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் பேருந்து ஒன்று புரூக் பாண்ட் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லும் வீடியோ காட்சி வெளியானது. சம்மந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவலர்கள் அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 A (TN 42 M 5112) என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநர் இருக்கையின் அருகில் உள்ள ஜன்னலில் அமர்ந்து அந்த பேருந்தின் ஊழியர் ஒருவர் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில், பயணம் செய்யும் அந்த ஊழியரால், இருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டது.



இது போன்ற மீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...