நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மார்க்கெட் பகுதியில் உள்ள பழக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த சில கடைகளில் மாம்பழங்கள், ஏத்தலின் கிராசரால் எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இதைப் பற்றி அதிகாரிகள் கூறும்போது :- மாம்பழங்கள் மட்டும் இன்றி வாழைப்பழங்களும், இதே போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைப்போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்களை உண்பதால் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுமட்டுமின்றி, புற்றுநோய் அபாயமும் உள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு இதுபோன்ற விவகாரங்கள் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா நகரமான உதகையில் வந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மார்க்கெட் பகுதியில் உள்ள பழக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த சில கடைகளில் மாம்பழங்கள், ஏத்தலின் கிராசரால் எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இதைப் பற்றி அதிகாரிகள் கூறும்போது :- மாம்பழங்கள் மட்டும் இன்றி வாழைப்பழங்களும், இதே போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைப்போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்களை உண்பதால் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுமட்டுமின்றி, புற்றுநோய் அபாயமும் உள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு இதுபோன்ற விவகாரங்கள் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா நகரமான உதகையில் வந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.