ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மார்க்கெட் பகுதியில் உள்ள பழக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு இருந்த சில கடைகளில் மாம்பழங்கள், ஏத்தலின் கிராசரால் எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. 

இதைப் பற்றி அதிகாரிகள் கூறும்போது :- மாம்பழங்கள் மட்டும் இன்றி வாழைப்பழங்களும், இதே போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைப்போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்களை உண்பதால் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுமட்டுமின்றி, புற்றுநோய் அபாயமும் உள்ளது. 

எனவே, பொதுமக்களுக்கு இதுபோன்ற விவகாரங்கள் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 

பல்வேறு நாடுகளில் இருந்தும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா நகரமான உதகையில் வந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...