15 வருடங்களாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.



இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...