திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.