பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு வழங்கப்படும் நிர்பயா நிதி ரூ. 800 கோடியாக அதிகரிப்பு

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது. 

வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...