நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார்.
குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார்.