எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு : காங்கிரசுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளியா..?

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...