பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.