கோவை வ.உ.சி பூங்காவில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் திடீர் ஆய்வு

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



கோவை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங்,  சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, வ.உ.சி உயிரியல் பூங்காவில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மான்கள், மயில்கள், குரங்குகள் காப்பிடங்களையும், பாம்புகள் பண்ணையினையும் அவர் பார்வையிட்டார். பின்னர், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கான ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். 



பின்னர், கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில், மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், சாலைகள், மின்விளக்குகள், குடிதண்ணீர், பாதாள சாக்கடைகள் மேலாண்மைப் பணிகள், துப்புரவு தூய்மைப் பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடைபெற்று வரும் பணிகள் பற்றியும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் அதிகாரி ஹர்மந்தர் சிங் கலந்தாய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...