யானைகள் மீது அக்கறை காட்டுகிறதா மாநில அரசு?

கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் யானை-மனித மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதே போல், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை தலை தூக்கியுள்ளது.

இதன் காரணமாக தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் லோகுர், தீபக் குப்தா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, "யானை பிரச்சனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கூறி பல்வேறு மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் மட்டுமே அதற்கு பதில் கொடுத்தது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை." என்ற பதிலை கொடுத்தது.

"கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்தியாவில் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்த பிரச்சனையை மெத்தனப் போக்கில் எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்." என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த பிரச்சனையில் வன உயிர் அறக்கட்டளை அமைப்பு, "இந்தியா முழுவதும், 70 சதவீத யானை வழித்தடங்கள் பட்டா நிலங்களில் தான் உள்ளன. அவற்றில் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னதாகவே மீட்டிருக்க வேண்டும். புதிய வழித்தடங்கள் உருவாக்குவதைக் காட்டிலும் இதுவே சிறந்த வழிமுறையாக அமைந்திருக்கும். தற்போது, யானை வழித்தடங்களை மீட்பதுவும், அமைப்பதுவும் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்கிறது.

இந்தியா முழுவதும் 11 யானை வழித்தடங்கள் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...