கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் யானை-மனித மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதே போல், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
இதன் காரணமாக தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் லோகுர், தீபக் குப்தா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, "யானை பிரச்சனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கூறி பல்வேறு மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் மட்டுமே அதற்கு பதில் கொடுத்தது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை." என்ற பதிலை கொடுத்தது.
"கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்தியாவில் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்த பிரச்சனையை மெத்தனப் போக்கில் எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்." என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த பிரச்சனையில் வன உயிர் அறக்கட்டளை அமைப்பு, "இந்தியா முழுவதும், 70 சதவீத யானை வழித்தடங்கள் பட்டா நிலங்களில் தான் உள்ளன. அவற்றில் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னதாகவே மீட்டிருக்க வேண்டும். புதிய வழித்தடங்கள் உருவாக்குவதைக் காட்டிலும் இதுவே சிறந்த வழிமுறையாக அமைந்திருக்கும். தற்போது, யானை வழித்தடங்களை மீட்பதுவும், அமைப்பதுவும் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்கிறது.
இந்தியா முழுவதும் 11 யானை வழித்தடங்கள் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் யானை-மனித மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதே போல், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
இதன் காரணமாக தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் லோகுர், தீபக் குப்தா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, "யானை பிரச்சனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கூறி பல்வேறு மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் மட்டுமே அதற்கு பதில் கொடுத்தது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை." என்ற பதிலை கொடுத்தது.
"கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்தியாவில் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்த பிரச்சனையை மெத்தனப் போக்கில் எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்." என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த பிரச்சனையில் வன உயிர் அறக்கட்டளை அமைப்பு, "இந்தியா முழுவதும், 70 சதவீத யானை வழித்தடங்கள் பட்டா நிலங்களில் தான் உள்ளன. அவற்றில் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னதாகவே மீட்டிருக்க வேண்டும். புதிய வழித்தடங்கள் உருவாக்குவதைக் காட்டிலும் இதுவே சிறந்த வழிமுறையாக அமைந்திருக்கும். தற்போது, யானை வழித்தடங்களை மீட்பதுவும், அமைப்பதுவும் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்கிறது.
இந்தியா முழுவதும் 11 யானை வழித்தடங்கள் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.