கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 4 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகஙககூடும். 38 டிகிரி செல்சியஸ் என்ற போது 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகக்கூடும். இதுவரை கோவையில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் தான் பதிவாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையில் வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக சில சமயம் காற்று சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் வாழை மரத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி கொள்வது நல்லது. வானம் தெளிவாகக் காணப்படுவதால் வெயிலின் தாக்கம், ரேடியேஷன் நேரடியாக மக்கள் மீது படும்," என்றார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 4 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகஙககூடும். 38 டிகிரி செல்சியஸ் என்ற போது 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகக்கூடும். இதுவரை கோவையில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் தான் பதிவாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையில் வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக சில சமயம் காற்று சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் வாழை மரத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி கொள்வது நல்லது. வானம் தெளிவாகக் காணப்படுவதால் வெயிலின் தாக்கம், ரேடியேஷன் நேரடியாக மக்கள் மீது படும்," என்றார்.