கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்பு

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 4 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகஙககூடும். 38 டிகிரி செல்சியஸ் என்ற போது 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகக்கூடும். இதுவரை கோவையில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் தான் பதிவாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையில் வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக சில சமயம் காற்று சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் வாழை மரத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி கொள்வது நல்லது. வானம் தெளிவாகக் காணப்படுவதால் வெயிலின் தாக்கம், ரேடியேஷன் நேரடியாக மக்கள் மீது படும்," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...