சச்சினுக்கு 45-வது பிறந்த நாள் : நூலகம் திறந்து கவுரவித்த கேரள அரசு

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

இன்று சச்சின் தெண்டுல்கருக்கு 45 வயது முடிந்து, 46-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, வி.வி.எஸ்., லட்சுமண், முகமது கயூப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

தனது பிறந்த நாளையொட்டி, சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில், கேரளாவில் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...