சச்சினுக்கு 45-வது பிறந்த நாள் : நூலகம் திறந்து கவுரவித்த கேரள அரசு

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

இன்று சச்சின் தெண்டுல்கருக்கு 45 வயது முடிந்து, 46-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, வி.வி.எஸ்., லட்சுமண், முகமது கயூப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

தனது பிறந்த நாளையொட்டி, சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில், கேரளாவில் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...