கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.
