காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...