திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.