நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.

உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.
