உதகையில் பத்திரப்பதிவு செய்ய வழக்கறிஞரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வழக்கறிஞரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

உதகையில் பத்திரப் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று எடக்காடு பகுதியில் நிலப்பதிவு செய்ய வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது, நிலப்பதிவு செய்ய ரூ. 9 ஆயிரம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பத்திரப் பதிவாளர் ரூ. 8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட வழக்கறிஞர் ரவிக்குமார், இது தொடர்பாக லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பத்திரப் பதிவாளர் ரமேஷிடம், வழக்கறிஞர் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...