கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.

காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பார்க் கேட் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சாலை ஆமினி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அடுக்கு மேம்பாலம் 100 அடி சாலையில் இருந்து ஆவராம்பாளையம் சாலை வரை கட்டப்படுகிறது.
இந்த பாலம் பயனற்ற நிலையில் இருப்பதாகவும், கோவையின் 'சூசைட்-பாயின்ட்' என்றும் கோவை மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் 'டின்' ஒன்று கீழே விழுந்தது. இதனால், சாலையில் சென்ற நான்கிற்கு மேற்பட்ட கார்கள் மீது தார்கள் பூசப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.