கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.
