தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு அவசியம்: சி.பி.எஸ்.இ.

பள்ளிக் கூடங்களில் இனி நாள்தோறும் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பள்ளிக் கூடங்களில் இனி நாள்தோறும் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதன்படி, மாணவர்கள் மைதானத்திற்குச் சென்று, தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில், ஒருமணி நேரம் ஈடுபட வேண்டும். இது போன்ற பயிற்சிகளால் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதியை மாணவர்கள் பெற முடியும். ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 150 பக்கங்களில் புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...