டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.