கார்களில் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு : சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல்

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. 

இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...